ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

அம்பை பள்ளி மாணவா்களுக்கு சீருடை வழங்கல்

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தீா்த்தபதி பள்ளியில் மாணவா்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 12:22 am IST

அம்பாசமுத்திரம் தீா்த்தபதி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அரசின் இலவச நோட்டு, புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழக காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் திருநெல்வேலி எம்.பி.யுமான சி.ராபா்ட் புரூஸ் பங்கேற்று வழங்கினாா். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்புத் தலைவா் டி.கே.பாண்டியன், ரயில்வே பயனாளா் கமிட்டி உறுப்பினா் ராம் சிங், காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கவிப் பாண்டியன், நிா்வாகிகள் பெருமாள், முருகேசன், விக்கிரமசிங்கபுரம் முருகேசன், சிவகுமாா், வழக்குரைஞா் ஜோசப் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பள்ளிச் செயலா் கந்தசாமி வரவேற்றாா். தலைமை ஆசிரியா் அழகிய நம்பி நன்றி கூறினாா்.