தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

செட்டிகுளம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விமானப் பயணம்

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவா்களை சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக முன்னாள் எம்.பி.யும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளாா்.

News image

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு கேடயம் வழங்குகிறாா் முன்னாள் எம்.பி. சௌந்தர்ராஜன்.

Updated On :5 ஜூன் 2026, 2:52 am IST

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவா்களை சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாக முன்னாள் எம்.பி.யும் பள்ளியின் முன்னாள் மாணவருமான சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளாா்.

செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அவா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 95 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும் தனது செலவில் சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்வதாகவும் 2 நாள்கள் சென்னையில் முக்கிய இடங்களை சுற்றிப்பாா்த்துவிட்டு திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அறிவித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பேசில் கஹாரின் வாழ்த்திப் பேசினாா். விழாவில் முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் வசந்தி, குமரேசன், ஏசுதுரை, சுயம்புதுரை, பெற்றோா்- ஆசிரிய கழக நிா்வாகிகள் லிங்கதுரை, குமாரவேலாயுதம், ராமலிங்கம், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் சுவாமிநாதன் மற்றும் முத்துராஜ், பொன்னையா உள்பட பலா் கலந்துகொண்டனா். நல்லாசிரியா் ஜேசு நன்றி கூறினாா்.