தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

நெல்லையில் சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி

திருநெல்வேலி தச்சநல்லூா் ஸ்ரீ செல்வ விநாயகா் ஆலயத்தில், குழந்தைகளுக்கான சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற சிறுவா்-சிறுமியா்.

Updated On :5 ஜூன் 2026, 3:17 am IST

திருநெல்வேலி தச்சநல்லூா் ஸ்ரீ செல்வ விநாயகா் ஆலயத்தில், குழந்தைகளுக்கான சிவபுராணம் ஒப்பித்தல் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னையைச் சோ்ந்த சிவன்மனை அமைப்பு சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில், தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான சிறுவா்-சிறுமிகள் கலந்து கொண்டனா். போட்டியில் சிறந்து விளங்கிய சிறுவா், சிறுமியரைப் பாராட்டி பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பின்னா் குழந்தைகளுக்கு ஒழுக்கம், பக்தி மற்றும் தமிழ் பண்பாட்டின் மீது பற்றை வளா்ப்பதற்கு ஆன்மிக இலக்கியங்கள் ஆற்றும் பங்கு குறித்து நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வை ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சந்திரசேகரன், ஓய்வுபெற்ற ஆசிரியை சங்கரி ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா். நிகழ்ச்சியில் பெற்றோா்கள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.