ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் முதல் பிளே-ஆஃப்ஸ் போட்டியிலேயே பேட்டிங்கின் அனைத்து விதமான விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேற்றிரவு (மே.27) நடந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 243/8 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
இந்தப் போட்டியில் சூர்யவன்ஷியின் ஸ்டிரைக் ரேட் 334.48 ஆக இருந்தது. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவராக சூர்யவன்ஷி 680 ரன்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ஆரஞ்சு கேப் விருதையும் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பெற்ற விருதுகள் விபரம்: சூப்பர் சிக்ஸர் (அதிக சிக்ஸர்கள்), சூப்பர் ஃபோர் (அதிக பவுண்டரிகள்), சூப்பர் ஸ்டிரைக் ரேட் (சிறந்த ஸ்டைரைக் ரேட்), ஆட்ட நாயகன் விருதுகள் என் நான்கையும் பெற்றார்.
இந்த நான்கு விருதுகளுடன் ஆரஞ்சு கேப் விருதையும் வென்றார். தான் விளையாடிய முதல் பிளே-ஆஃப்ஸ் போட்டியிலேயே பேட்டிங்கிற்கென வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்று அசத்தியுள்ளார்.
Summary
Vaibhav Sooryavanshi won all the batting awards in his first Knock out match in IPL
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











