இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

வைபவ் சூர்யவன்ஷியின் தாரக மந்திரம் என்ன? ஆட்ட நாயகன் விருதுக்குப் பிறகு பேட்டி!

ஆட்ட நாயகன் விருது வென்ற வைபவ் சூர்யவன்ஷி பேசியிருப்பதாவது...

News image

வைபவ் சூர்யவன்ஷி. - படம்: எக்ஸ் / ராஜஸ்தான் ராயல்ஸ்.

Updated On :28 மே 2026, 1:13 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது முதல் பிளே ஆஃப்ஸ் ஆட்டத்திலேயே சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார். குறைவாக சிந்தித்து, அதிகமாகச் செயல்படுவதுதான் தனது தாரக மந்திரம் எனக் கூறியுள்ளார்.

நேற்றிரவு (மே.27) நடந்த எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 243/8 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் 19.2 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடித்து அனைத்து விருதுகளையும் வென்றார்.

ஆட்ட நாயகன் விருதுவென்ற பிறகு வைபவ் சூர்யவன்ஷி கூறியிருப்பதாவது:

வெற்றிபெறும்போது அதிலிருக்கும் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அடுத்த போட்டிக்குச் செல்வேன். இதேபோல அடுத்த போட்டியிலும் வென்று இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும்.

அடுத்த போட்டி குறித்து சிறிது யோசிக்கிறேன். ஆனால், அதிகளவு சிந்திக்க மாட்டேன். என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடுவேன், தேவையில்லாமல் சிந்திக்க மாட்டேன். எங்காவது நான் முன்னேற வேண்டுமெனில் அதில் கவனம் செலுத்துவேன்.

எதிரணியில் யாரெல்லாம் பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள், பவுண்டரியில் தூரம் எவ்வளவு என்பது போன்ற விஷயங்கள் மட்டுமே பார்ப்பேன். என்னுடைய நோக்கத்தில் நான் நேர்மறையாக இருப்பேன். அதைச் செய்யும்போது பந்துவீச்சாளர்கள் அழுத்தத்திற்குச் செல்கிறார்கள். அதையே தொடர்ச்சியாக செய்து போட்டியில் ஆதிக்கம் செலுத்த விழைகிறேன்.

நான் ஆட்டமிழந்த பிறகுதான் அந்த சாதனை குறித்தே அறிந்தேன். அந்த நேரத்தில் எனது கவனம் எல்லாம் அணிக்கு உதவ வேண்டும் என்றே இருந்தேன். ஏனெனில் சதம் எப்போது வேண்டுமானல் அடிக்கலாம்; ஆனால், தற்போதைக்கு கோப்பை வெல்வது மட்டுமே முக்கியம்.

எனக்கு பலவீனம் என நான் உணர்ந்தால் அதைச் சரிசெய்ய உழைக்கிறேன். எதிரணியினர் என்ன மாதிரி திட்டம் தீட்டுகிறார் என்பது எனக்குத் தெரியாது. அது அவர்களது திட்டம். நான் என்னுடைய திட்டங்களில் கவனம் செலுத்துகிறேன். இயல்பான கிரிக்கெட் விளையாடுகிறேன் என்றார்.

Summary

Vaibhav Sooryavanshi’s mantra: think less, deliver

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.