ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கிய வெற்றியைப் பெற்றுத்தந்த 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகன் விருது வென்றார். தனது வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான் எனக் கூறியுள்ளார்.
நேற்றிரவு நடந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ அணி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் அரைசதம் அடித்தபோது கைகளில் ஏ போன்று வித்தியாசமாகக் கொண்டாடினார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு, இது குறித்து வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் விடியோவில் கூறியிருப்பதாவது:
இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் தனிப்பட்டவை. வருங்காலத்திலும் இதைத் தொடர்வேன். உண்மையில் இது எனது அம்மாவுக்காக செய்தது. எனது அம்மாவின் முதல் எழுத்து ’ஏ’வில் (ஆங்கிலத்தில்) தொடங்குகிறது. இதைச் சொல்லாமல் தொடரால் என்றிருந்தேன் தற்போது சொல்லும்படி ஆகிவிட்டது என்றார்.
Summary
"My mother is the reason behind this celebration..." — Suryavanshi opens up!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறுமையும் எளிமையும்... ஆட்ட நாயகன் விருது வென்ற ககிசோ ரபாடாவின் பேட்டி!

உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

15 வயது சிறுவனைப் பார்த்து பயப்படுவேன் என நினைக்கவில்லை: ஜேமிசன்

பும்ரா, ஹேசில்வுட் பயமில்லை: கேக் வெட்ட நேரமில்லாமல் தூங்கச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி




