ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயதான் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, “டி20 போட்டிகளில் 200 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றிரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி குவாலிஃபயர் 2 போட்டிக்கு முன்னேறும் என்பது கவனிக்கத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி நடப்பு ஐபிஎல் தொடரில் அந்த அணியிலேயே அதிக ரன்கள் (583) குவித்தவராக இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 175 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் உடனான கலந்துரையாடலின்போது சூர்யவன்ஷி கூறியிருப்பதாவது:
டி20 போட்டிகளில் 200 ரன்கள் அடிக்க வேண்டும். கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து 200 ரன்கள் குவிக்க வேண்டும். எந்தப் போட்டியிலும் நான் 20 ஓவர்கள் விளையாடினால் கெயின் சாதனையை முறியடிப்பேன் என்றார்.
ஏற்கெனவே, சூர்யவன்ஷி டி20 போட்டிகளில் 144 ரன்கள் குவித்துள்ளார். யு-19 உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அதிகபட்சமாக 332 ரன்கள் குவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Summary
I want to score 200 runs in an IPL or T20 match: Vaibhav Sooryavanshi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











