ஐபிஎல் பிளே ஆஃப்ஸ் வரலாற்றில் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் வியப்பூட்டுகிற வகையில் விளையாடி இருக்கிறார். 100க்கும் அதிகமான சராசரியுடன் விளையாடும் முதல் வீரராக ரஜத் படிதார் சாதனை படைத்துள்ளார்.
நேற்றிரவு நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்கலில் 254/5 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய குஜராத் 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் ரஜத் படிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். ஆட்ட நாயகன் விருதும் வென்று அசத்தியுள்ளார்.
இதுவரை பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் 6 இன்னிங்ஸில் ரஜத் படிதார் 338 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 112.66ஆக இருக்கிறது. ஒரு சதம் 2 அரைசதம் உடன் 193.14 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடி இருக்கிறார்.
இந்த பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் 25 போர்கள், 24 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆர்சிபி அணியின் வரலாற்றிலேயே ரஜத் படிதார் அளவுக்கு ஒரு வீரர் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சீசனில் கோப்பை வென்ற ரஜத் படிதார் நடப்பு சீசனில் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பிளே ஆஃப்ஸ் வரலாற்றில் ரெய்னா 714 ரன்களுடன் முதலிடத்தில் இருக்க எம்.எஸ். தோனி 523 ரன்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் ரஜத் படிதார் 13ஆவது இடத்தில் இருக்கிறார்.
அதிகமான சராசரியுடன் ( 112.66) பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் விளையாடியவர்களில் ரஜத் படிதார் தனியொருவனாக முதலிடத்தில் இருக்கிறார். யாருமே அவருக்கு அருகில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Rajat patidar has one of the most remarkable stat in IPL playoffs history
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










