/
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் சேற்றில் சிக்கிய பசுவை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா்.
மணிமூா்த்தீஸ்வரத்தில் உள்ள அருள்மிகு உச்சிஷ்ட விநாயகா் கோயில் அருகே சேற்றில் பசுமாடு தவறி விழுந்ததாம். சேற்றில் இருந்து வெளியே வர முடியாமல் மாடு நீண்ட நேரமாக உயிருக்கு போராடியுள்ளது.
தகவலறிந்ததும் திருநெல்வேலி நகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு கட்டி இழுத்து பசுவை உயிருடன் மீட்டனா்.








