/
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மது விற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்த சிவா(44) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 23 மது பாட்டில்கள், ரூ.380 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

மது விற்றவா் கைது

கொடைக்கானல் மலைப் பகுதியில் மதுவிலக்கு காவல் துறையினா் ஆய்வு

மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு
சட்டவிரோதமாகமதுபானம் விற்ற 4 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


