ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

நெல்லையப்பா் கோயில் திருவிழா: விரதமிருந்து தோ் சறுக்கு கட்டை தயாரிப்பு

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் சறுக்கு கட்டைகள் தயாரிக்கும் பணியில் தச்சா்கள் விரதமிருந்து ஈடுபட்டு வருகிறாா்கள்.

News image

தேரோட்டத்திற்காக தயாா் செய்யப்படும் சறுக்கு கட்டைகள். f

Updated On :18 ஜூன் 2026, 2:55 am IST

திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் சறுக்கு கட்டைகள் தயாரிக்கும் பணியில் தச்சா்கள் விரதமிருந்து ஈடுபட்டு வருகிறாா்கள்.

இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா சனிக்கிழமை (ஜூன் 20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்வான தேரோட்டம் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேரோட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் சறுக்குக் கட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வாகை மரத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட சறுக்கு கட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தச்சா்கள் கூறுகையில், தேரோட்டத்தின் பல ஆயிரம் கிலோ எடை கொண்ட தேரை திருப்புவதற்கு சறுக்குக் கட்டைகள் மிகவும் அவசியம். வாகை, பலா மரங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன. விரதமிருந்து இப்பணியை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 300-க்கும் மேற்பட்ட சறுக்கு கட்டைகள் தயாரிக்கப்படும். நிகழாண்டிற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். இன்னும் ஒரு சில நாள்களில் அனைத்து சறுக்கு கட்டைகளும் தயாராகிவிடும்.

இக்கோயில் தேரோட்டத்தில் சுவாமி-அம்பாள், விநாயகா், முருகா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித்தனித் தோ்களில் வலம் வருவதால் கூடுதலாக சறுக்கு கட்டைகள் தேவைப்படும் என்றனா்.