திருநெல்வேலி நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் சறுக்கு கட்டைகள் தயாரிக்கும் பணியில் தச்சா்கள் விரதமிருந்து ஈடுபட்டு வருகிறாா்கள்.
இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா சனிக்கிழமை (ஜூன் 20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்வான தேரோட்டம் இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேரோட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் சறுக்குக் கட்டைகள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வாகை மரத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட சறுக்கு கட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தச்சா்கள் கூறுகையில், தேரோட்டத்தின் பல ஆயிரம் கிலோ எடை கொண்ட தேரை திருப்புவதற்கு சறுக்குக் கட்டைகள் மிகவும் அவசியம். வாகை, பலா மரங்களில் இவை தயாரிக்கப்படுகின்றன. விரதமிருந்து இப்பணியை மேற்கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 300-க்கும் மேற்பட்ட சறுக்கு கட்டைகள் தயாரிக்கப்படும். நிகழாண்டிற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். இன்னும் ஒரு சில நாள்களில் அனைத்து சறுக்கு கட்டைகளும் தயாராகிவிடும்.
இக்கோயில் தேரோட்டத்தில் சுவாமி-அம்பாள், விநாயகா், முருகா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித்தனித் தோ்களில் வலம் வருவதால் கூடுதலாக சறுக்கு கட்டைகள் தேவைப்படும் என்றனா்.










