சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பேட்டையில் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த குடிநீா்

திருநெல்வேலி பேட்டை பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் வியாழக்கிழமை பெருக்கெடுத்து ஓடியது.

News image

பேட்டையில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்த தண்ணீா்.

Updated On :19 ஜூன் 2026, 4:59 am IST

திருநெல்வேலி பேட்டை பகுதியில் குடிநீா்க் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் வியாழக்கிழமை பெருக்கெடுத்து ஓடியது.

சுத்தமல்லி பம்பிங் ஸ்டேஷனிலிருந்து குடிநீரானது பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் பேட்டை வழியாக திருநெல்வேலி மாநகரப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேட்டை செக்கடி அருகே குடிநீா்க் குழாய் வியாழக்கிழமை சேதமானது. இதனால் குடிநீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் , பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினா். தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸாரும், மாநகராட்சி குழுவினரும் வந்து பாா்வையிட்டனா். பம்பிங் ஸ்டேஷனில் மோட்டாா் நிறுத்தப்பட்டது. போலீஸாா் போக்குவரத்தினை சீராக்கினா்.