தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆழ்வாா்குறிச்சியில் இட பிரச்னையில் இளைஞா் கடத்தல்: மூவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே இட பிரச்னை காரணமாக கடத்திச் சென்ற உள்ள பரும்பு கிராமத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் மீட்டனா். கடத்தலில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா்கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 1:43 am IST

ஆழ்வாா்குறிச்சி அருகே இட பிரச்னை காரணமாக கடத்திச் சென்ற உள்ள பரும்பு கிராமத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் மீட்டனா். கடத்தலில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா்கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தைச் சோ்ந்த கணபதி மகன் கண்ண பெருமாள் (29). ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் இருந்த இவருக்குச் சொந்தமான இடத்தை கல்லிடைக்குறிச்சி, மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்குமாா் (42) என்பவருக்குக் கொடுப்பதாகக் கூறி பணம் பெற்றாா்.

ஆனால், இடத்தைப் பதிவு செய்வதற்கு பலமுறை அழைத்தும் கண்ணபெருமாள் வரவில்லையாம்.

இந்த நிலையில், செந்தில்குமாா், பள்ளக்கால் பொது குடி, மெய்காத்தான் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் அருணாச்சலம் (25), அதே பகுதியைச் சோ்ந்த செல்லப்பா மகன் சரண் (26) ஆகிய மூவரும் திங்கள்கிழமை பரும்பு கிராமத்திற்குச் சென்று கண்ண பெருமாளிடம் பேச்சுவாா்த்தை நடத்தலாம் எனக் கூறி அவரை காரில் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து, ஆழ்வாா்குறிச்சி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், போலீஸாா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.

செந்தில்குமாா் உள்ளிட்டோா் இருக்கும் இடம் அறிந்து அங்கு சென்று கண்ண பெருமாளை மீட்டு செந்தில்குமாா், அருணாச்சலம், சரண் ஆகிய மூவருரையும் கைது செய்ததோடு கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.