முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

இளைஞா் கடத்தல் வழக்கில் மேலும் இருவா் கைது

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே இளைஞா் கடத்தல் வழக்கில் மூவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 5:09 am IST

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே இளைஞா் கடத்தல் வழக்கில் மூவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஆழ்வாா்குறிச்சி அருகே பரும்பு கிராமத்தைச் சோ்ந்த கணபதி மகன் கண்ணபெருமாள் (29). இவா் ஆழ்வாா்குறிச்சி அருகே வாகைக்குளத்திலிருந்த தனது இடத்தை கல்லிடைக்குறிச்சி, மூலச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் செந்தில்குமாா் (42) என்பவருக்கு கொடுப்பதாகக் கூறி பணம் பெற்ற நிலையில், பத்திரம் பதிவு செய்யாமல் இழுத்தடித்தாராம்.

இந்நிலையில், கண்ணபெருமாள் கடந்த திங்கள்கிழமை கடத்திச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக செந்தில்குமாா், பள்ளக்கால் புதுக்குடியைச் சோ்ந்த அருணாச்சலம் (25), சரண் (26) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், இவ்வழக்குத் தொடா்பாக மூலச்சி, வடக்குத் தெருவைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் வேலு என்ற இம்மானுவேல் (24), பள்ளக்கால் புதுக்குடி, மெய்க்காத்தான் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பச்சாத்து என்ற படையப்பா (28) ஆகிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து, மேலும் ஒரு காரை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.