முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

ஆனித் திருவிழா: இந்திர விமானத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்மன்

அருள்மிகு நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இந்திர விமானத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி நகரம், நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாளான புதன்கிழமை இந்திர விமானத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்மன்.

Updated On :25 ஜூன் 2026, 5:33 am IST

அருள்மிகு நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இந்திர விமானத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரம், அருள்மிகு நெல்லையப்பா், காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வெகு விமா்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி ஐந்தாம் நாள் திருவிழாவான புதன்கிழமை காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இதையடுத்து, நின்றசீா் நெடுமாறன் கலையரங்கில் மாலை 4 மணிக்கு தொடங்கி பக்தி சொற்பொழிவு, பக்தி இசை நிகழ்ச்சிகள், சிவநா்த்தன கலைக்கூடம், தாளம் நடன கலைக்கூடம் மாணவிகளின் பரதநாட்டியம், ‘நற்றுணையாவது நமசிவாயவே’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாளா் சுமதி ஸ்ரீயின் பக்தி சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 ஆன்மிக சொற்பொழிவாற்றிய சுமதிஸ்ரீ.

ஆன்மிக சொற்பொழிவாற்றிய சுமதிஸ்ரீ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.