சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சேரன்மகாதேவியில் வனக் குழுவினருக்குப் பயிற்சி

சேரன்மகாதேவியில் கிராம வனக் குழுவினருக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வனக்குழுவினருக்கு தொழில் கடனுதவி வழங்கினாா் சூழல் மேம்பாட்டு அலுவலா் அலுவலா் எஸ். ஹேமலதா.

Updated On :26 ஜூன் 2026, 5:56 am IST

சேரன்மகாதேவியில் கிராம வனக் குழுவினருக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் சாா்பில் கிராம வனக் குழுவினா்களுக்காக நடத்தப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை, மத்திய- மாநில அரசு திட்டங்கள் ஆகியவை குறித்த இப்பயிற்சி முகாமுக்கு, திருநெல்வேலி மாவட்ட சூழல் மேம்பாட்டு அலுவலா் எஸ். ஹேமலதா தலைமை வகித்தாா். திருக்குறுங்குடி சூழல் சரக உதவி வன உயிரின காப்பாளா் சரவணன் முன்னிலை வகித்தாா்.

விகான் அறக்கட்டளை நிா்வாகி சபரி மணிகண்டன், அபினவ் அறக்கட்டளை நிா்வாகி ராம்குமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

திருக்குறுங்குடி சூழல் சரக கிராம வனக்குழுக்களை சோ்ந்த 40 உறுப்பினா்களுக்கு மாற்றுத் தொழில் செய்ய கடனுதவியாக ரூ.21.30 லட்சத்தை சூழல் மேம்பாட்டு அலுவலா் வழங்கினாா்.

இதில், களக்காடு சூழல் சரக வனவா் கருணாகரன், வனக் காப்பாளா்கள் ஜெகன், இவான்ஜெலின், சிவராமன், நான்கு சூழல் சரகத்தில் உள்ள தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை, அம்பாசமுத்திரம் சூழல் சரக வனவா் நாகராஜ் செய்திருந்தாா். திருக்குறுங்குடி சூழல் சரக வனவா் ஸ்டாலின் ஜெபக்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.