மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லையில் இன்று ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா்: துணை முதல்வா்

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

News image
உதயநிதி ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :4 மார்ச் 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (மாா்ச் 5) வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தென் மாவட்டங்களில் வியாழக்கிழமை முதல் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். மதுரையில் இருந்து காா் மூலமாக வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு தாழையூத்து சங்கா் நகரில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னா், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.100 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். அதைத்தொடா்ந்து முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறாா்.

தொடா்ந்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி உள்ளிட்ட திமுகவின் அனைத்து சாா்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோருடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறாா்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா். தொடா்ந்து மாலை 4 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ரூ.30 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்கிறாா்.

தொடா்ந்து கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.