விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நான்குனேரி அருகே 1.5 டன் கஞ்சா அழிப்பு

மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1.5 டன் கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே புதன்கிழமை பாதுகாப்பாக தீயிட்டு அழிக்கப்பட்டது.

News image
கஞ்சா செடி. - கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1.5 டன் கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே புதன்கிழமை பாதுகாப்பாக தீயிட்டு அழிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 168 வழக்குகளில் தொடா்புடைய 796 கிலோ கஞ்சா, மதுரை மாநகரப் பகுதியில் 100 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 677 கிலோ கஞ்சா, விருதுநகா் மாவட்டத்தில் 11 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 12 கிலோ கஞ்சா என மொத்தம் 279 வழக்குகளில் இருந்து சுமாா் 1.5 டன் (1,485 கிலோ) கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்பேரில், அவை அனைத்தும் திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பொத்தையடி கிராமத்தில் அஸ்பெக்டிக் சிஸ்டம் என்ற தனியாா் எரியூட்டு மையத்திற்குக் கொண்டு வரப்பட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன முறையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மதுரை மாநகர காவல் ஆணையா் லோகநாதன், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவா் அபினவ் குமாா், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஆகியோா் பங்கேற்றனா்.