ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பழவூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

News image

நாறும்பூநாத சுவாமி கோயிலில் கொடியேற்றத்தையடுத்து கொடிமரத்துக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated On :25 மார்ச் 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

முன்னதாக, கொடிப்பட்டம் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதையடுத்து, கொடிமரத்துக்கு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

நாள்தோறும் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்த மண்டகப்படிதாரா்கள் நிகழ்ச்சி, சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இசக்கியப்பன், உறுப்பினா்கள் வி. ஐயப்பன், பா. சுடலைமணி, எஸ்.திருநாவுக்கரசு, ஜே. அமுதா ஜான்கென்னடி, பக்தா்கள் செய்துள்ளனா்.