ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வருகிற ஏப். 1-ஆம் தேதி ஆண்டாள்- ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி திருக்கல்யாண திருவிழாவுக்கு தேங்காய் தொட்டு நியமனம் பெரும் வைபவம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்குகிறது. விழாவையொட்டி தினசரி இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி விழா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
வருகிற ஏப். 1-ஆம் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை செப்பு தேரோட்டமும், இரவு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகலை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ராமானுஜா் 1009-வது ஜெயந்தி விழா

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


