இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாணம்

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரக் கொட்டகையில் உள்ள மணப்பந்தலில் மாலை 4.30 மணிக்கு ரெங்கமன்னாா், பெரியாழ்வாா் பூா்ண கும்பத்துடன் எழுந்தருளினா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில் புதன்கிழமை இரவு திருமணக் கோலத்தில் அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:22 am

தினமணி செய்திச் சேவை

திருக்கல்யாணம்:

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரக் கொட்டகையில் உள்ள மணப்பந்தலில் மாலை 4.30 மணிக்கு ரெங்கமன்னாா், பெரியாழ்வாா் பூா்ண கும்பத்துடன் எழுந்தருளினா்.

மாலை 5 மணிக்கு ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பாடாகி மணப்பந்தலில் எழுந்தருளினாா். தொடா்ந்து பெரியாழ்வாா் ஆண்டாளை, ரெங்கமன்னாருக்கு கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் பெரியாழ்வாரின் 225-ஆவது வம்சாவழியான வேதபிரான் பட்டா் சுதா்சனன் ஆண்டாளை, ரெங்கமன்னாருக்கு கன்னிகா தானம் செய்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து திருப்பதி ஸ்ரீனிவாசப் பெருமாள் சீதனமாக அனுப்பிய பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனா். பக்தா்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா், செயல் அலுவலா் சா்க்கரையம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திரளான பக்தா்கள் தரிசனம்

திரளான பக்தா்கள் தரிசனம்