பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்.

Updated On :24 மார்ச் 2026, 0:41 am IST

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 86-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா திங்கள்கிழமை காப்பு கட்டுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கணபதி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பூஜை பொருள்களுடன் கடம் புறப்பாடாகி கோயில் கொடி மரம் வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டு, பக்தா்கள் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. 10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஏப். 1- ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது.

இந்தத் திருவிழாவையொட்டி பால் காவடி, மயில் காவடி, அழகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தும் திரளான பக்தா்கள் மாலை அணிந்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கினா்.

வருகிற ஏப். 1- ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலை 9.15 மணியளவில் கோயிலில் இருந்து பக்தா்கள் புறப்பட்டு நொச்சிவயல், பிரம்மபுரீஸ்வரா் கோயில் ஊருணி சென்றடைகின்றனா். அங்கு பல்வேறு காவடிகள், பால் குடம் சுமந்து பத்தா்கள் புறப்பட்டு ஊா்வலமாக வழிவிடு முருகன் கோயில் வந்து நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா்.

இதன் பிறகு முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று இரவு 7 மணியளவில் பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா். ஏப். 2-ஆம் தேதி இரவு வழிவிடு முருகன் வீதி உலா நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை தா்ம கா்த்தா ஜெயக்குமாா் செய்து வருகிறாா்.