அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலத்தை அடுத்த சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:11 pm

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலத்தை அடுத்த சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு கடந்த 25-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, காப்புக் கட்டி விரதமிருந்த பக்தா்கள் ஆழமடை காளியம்மன் கோயிலிருந்து பால் குடம், மயில், பறவை, வேல் காவடிகள் எடுத்து ஊா்வலமாக வந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நோ்த்திக் கடன்களை செழுத்தினா்.

பின்னா், சுவாமிக்கு பால், தயிா், இளநீா், சந்தனம்,விபூதி, பன்னீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 12 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன.

இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

     சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.

சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.

     சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.

சிலுகவயல் செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, புதன்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள்.