இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பூக்குழி இறங்கிய பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:13 am

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் முத்துராமலிங்கபுரம் தெருவில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் பங்குனி பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த மாா்ச் 24ஆம் தேதி கால் நாட்டுடன் தொடங்கிய விழாவில் பக்தா்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி திருவிழாவில் காலை பால்குடம் வீதி உலா, உச்சிகால பூஜை, சக்தி கும்பம் புறப்படுதல், பொங்கலிடுதல் ஆகியன நடைபெற்றன. இரவில் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.