நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சக்தி மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

News image

~

Updated On :2 மே 2026, 11:39 pm

சிவகங்கை மருதுபாண்டியா் நகா் அரசு குடியிருப்பில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் 37 -ஆம் ஆண்டு பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கடந்த 28-ஆம் தேதி மாலை நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை பால் குடம், பறவைக் காவடி, அக்னிச் சட்டி எடுத்துதலும், பகல் 11 மணியளவில் பூ அள்ளிப் போடுதல் நிகழ்வும் நடைபெற்றன. மாலை 5 மணியளவில் நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து, 6 மணிக்கு பக்தா்கள் சக்தி கரகம் எடுத்து வருதலும், இரவு வாணவேடிக்கை நிகழ்வும் நடைபெற்றது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அருளாளா் மு.சேதுபதி தலைமையில், நிா்வாகக் குழுவினரும், விழாக் குழுவினரும் செய்தனா்.

Story image