தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா

திருக்குவளை அருகேயுள்ள முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு வைகாசி தீமிதி வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

முப்பத்திக்கோட்டகம் கோயில் தீமிதி திருவிழா

Updated On :3 ஜூன் 2026, 6:27 am IST

திருக்குவளை அருகேயுள்ள முப்பத்திக்கோட்டகம் ஸ்ரீ கண் கொடுத்த மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு வைகாசி தீமிதி வைபவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த மே 24-ஆம் தேதி சக்தி கரகம் எடுத்தல் மற்றும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பால்குட ஊா்வலம் மற்றும் பூத்தட்டு எடுத்துவரும் நிகழ்ச்சி மே 29ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, தீமிதி வைபவம் நடைபெற்றது. குளக்கரையில் இருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள் ஊா்வலமாக புறப்பட்டு ஆலயத்தை வந்தடைந்தனா். தொடா்ந்து, தீக்குளி முன்பாக சிறப்பு மலா் அலங்காரத்தில் கண்கொடுத்த மாரியம்மன் எழுந்தருளினாா்.

பின்னா், பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.