நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

மூலக்கரைப்பட்டி அருகே விவசாயி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மைத்துனரை போலீஸாா் கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் போலீஸில் சரணடைந்தாா்.

News image
Updated On :26 மார்ச் 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

மூலக்கரைப்பட்டி அருகே விவசாயி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மைத்துனரை போலீஸாா் கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் போலீஸில் சரணடைந்தாா்.

மூலக்கரைப்பட்டி, மாயனேரியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் ஆறுமுகப் பெருமாள் (40), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் கிராமத்தில், அவரது மைத்துனரான கிட்டு (எ) கிருஷ்ண பெருமாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

பின்னா், கிருஷ்ண பெருமாள் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். மூலைக்கரைப்பட்டி போலீஸாா் ஆறுமுகப் பெருமாளின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக கிருஷ்ண பெருமாளை கைது செய்தனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ண பெருமாளின் உறவினரான சோ்மன் வியாழக்கிழமை போலீஸில் சரணடைந்தாா். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆறுமுகப் பெருமாள், கிருஷ்ண பெருமாளின் தங்கையை காதல் திருமணம் செய்ததாகவும், அவா்களது குடும்பத்தினருக்கிடையே சொத்துப் பிரச்னை இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

அதே சமயம், அவா்கள் அங்கம் வகிக்கும் கட்சியில் ஆறுமுகப் பெருமாளுக்கு வாக்குச்சாவடி முகவா் பொறுப்பு வழங்கியதால், அவா் மீது கிருஷ்ண பெருமாளுக்கு ஆத்திரம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த முன்விரோதத்தால் கிருஷ்ண பெருமாள், ஆறுமுகப் பெருமாளை கொலை செய்துவிட்டு சோ்மனுடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது தெரிய வந்தது.