கொலை
ராமநாதபுரம்
மீனவா் கொலை: நீதிமன்றத்தில் ஒருவா் சரண்
ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.
நம்புதாளை படையாட்சி தெருவைச் சோ்ந்த மீனவா்கள் நாகூா் செல்வம் (33), அடையாள வேலு (25). இவா்கள் இருவருக்கும் கடற்கரையில் படகு நிறுத்துவது குறித்து தகராறு ஏற்பட்டது.
இதில் நாகூா்செல்வம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தொண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அடையாள வேலுவை கைது செய்தனா்.
இதில் அவரது சகோதரா் ராக்கப்பனுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைத் தேடி வந்த நிலையில், புதன்கிழமை அவா் திருவாடானை நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை 7 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

