திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே வீடு புகுந்து வழக்குரைஞா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சோ்ந்தவா் பூலுடையாா்(35). வழக்குரைஞா். இவருக்கும், பாளையங்கோட்டை சந்தை தெற்கு பஜாா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகள் ராஜமகாலெட்சுமி (30) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருநெல்வேலி தியாகராஜநகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக ராஜமகாலெட்சுமி பணியாற்றியதால் இத்தம்பதி திருநெல்வேலியில் வசித்து வந்தனா்.
இவா்களுக்குள் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், கடந்த 1ஆம் தேதி ராஜமகாலெட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இந்நிலையில், பூலுடையாா் கடம்போடுவாழ்வு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை இருந்தபோது, மாலை 3.30 மணியளவில் அங்கு வந்த 2 போ் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினா்.
இந்தக் கொலையில் தொடா்புடைய அருணாச்சலராஜா (30), ராம் (29) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். அதில் அவா்கள், ராஜமகாலெட்சுமியின் நெருங்கிய உறவினா்கள் என தெரியவந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை

புதுச்சேரி ரௌடி கடலூா் அருகே வெட்டிக்கொலை

லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை
1.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


