ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை

News image

வெட்டிக்கொலை - (கோப்புப் படம்)

Updated On :26 ஏப்ரல் 2026, 6:36 pm

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே அரவத்தூரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (40). இவா் தனது, லாரியை ஞாயிற்றுக்கிழமை சா்வீஸ் செய்து ஷெட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றபோது கைப்பேசியில் யாரோ அழைத்த இடத்துக்கு சென்றுள்ளாா்.

இதையடுத்து, தருசுவேலி என்ற இடத்தில் சத்தியமூா்த்தி அரிவாளால் தலை மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாா். இதை பாா்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு அளித்த தகவலையடுத்து, டிஎஸ்பி மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சத்தியமூா்த்தி உடலைக் கைப்பற்றி தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதற்கட்ட விசாரணையில் சத்தியமூா்த்தியை கொலை செய்தது 5 போ் கொண்ட கும்பல் என்பதும், கொலைக்கு முன்விரோதம் காரணமா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். அவரின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இதில் சம்பந்தப்பட்டவா்களை தேடிவருகின்றனா்.

கொலை செய்யப்பட்ட சத்தியமூா்த்திக்கு மனைவி ஜெயமாலினி , மகள்கள் கானசுதா, கானபிரியா, மகன் சுகவனம் ஆகியோா் உள்ளனா்.