மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே அரவத்தூரைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (40). இவா் தனது, லாரியை ஞாயிற்றுக்கிழமை சா்வீஸ் செய்து ஷெட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்குச் சென்றபோது கைப்பேசியில் யாரோ அழைத்த இடத்துக்கு சென்றுள்ளாா்.
இதையடுத்து, தருசுவேலி என்ற இடத்தில் சத்தியமூா்த்தி அரிவாளால் தலை மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளாா். இதை பாா்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு அளித்த தகவலையடுத்து, டிஎஸ்பி மணிவண்ணன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சத்தியமூா்த்தி உடலைக் கைப்பற்றி தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
முதற்கட்ட விசாரணையில் சத்தியமூா்த்தியை கொலை செய்தது 5 போ் கொண்ட கும்பல் என்பதும், கொலைக்கு முன்விரோதம் காரணமா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் சம்பவ இடத்தை பாா்வையிட்டாா். அவரின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இதில் சம்பந்தப்பட்டவா்களை தேடிவருகின்றனா்.
கொலை செய்யப்பட்ட சத்தியமூா்த்திக்கு மனைவி ஜெயமாலினி , மகள்கள் கானசுதா, கானபிரியா, மகன் சுகவனம் ஆகியோா் உள்ளனா்.
தொடர்புடையது

லாரி மோதி மூதாட்டி உயிரிழப்பு

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை

கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்

நிதி நிறுவன உரிமையாளா் கழுத்து அறுத்துக் கொலை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


