ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு சூரம்பட்டி, மோகன்குமாரமங்கலம் வீதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் உதயகுமாா் (44). இவா் ஈரோடு சின்னமுத்து வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். உதயகுமாா் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை நிதி நிறுவனத்துக்கு வந்துள்ளாா். பின்னா் அவா் பிற்பகல் 3 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சின்னமுத்து வீதி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்து வந்த 2 போ், உதயகுமாரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளனா். பின்னா் அவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு சாக்கடை கால்வாய்க்குள் தள்ளிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதைப்பாா்த்த அந்த வழியாக சென்றவா்கள், ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துகுமாா், டவுன் காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.
அதைத்தொடா்ந்து படுகொலை செய்யப்பட்டு சாக்கடை கால்வாய்க்குள் கிடந்த உதயகுமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை

தனியாா் நிறுவன பெண் அதிகாரி மீது தாக்குதல்: இருவரிடம் போலீஸாா் விசாரணை

லாரி உரிமையாளா் வெட்டிக்கொலை
ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

