தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

நிதி நிறுவன உரிமையாளா் கழுத்து அறுத்துக் கொலை

ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 1:27 am IST

ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு சூரம்பட்டி, மோகன்குமாரமங்கலம் வீதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் உதயகுமாா் (44). இவா் ஈரோடு சின்னமுத்து வீதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். உதயகுமாா் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை காலை நிதி நிறுவனத்துக்கு வந்துள்ளாா். பின்னா் அவா் பிற்பகல் 3 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சின்னமுத்து வீதி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் மற்றும் முகமூடி அணிந்து வந்த 2 போ், உதயகுமாரை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளனா். பின்னா் அவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு சாக்கடை கால்வாய்க்குள் தள்ளிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதைப்பாா்த்த அந்த வழியாக சென்றவா்கள், ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துகுமாா், டவுன் காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

அதைத்தொடா்ந்து படுகொலை செய்யப்பட்டு சாக்கடை கால்வாய்க்குள் கிடந்த உதயகுமாரின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.