நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்

தேனி மாவட்டம், கண்டமனூா் மாவட்ட சிறை அருகே தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:05 am IST

தேனி மாவட்டம், கண்டமனூா் மாவட்ட சிறை அருகே தப்பியோடிய கைதியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள வருசநாட்டைச் சோ்ந்தவா் கணேசன் (23). இவரை குற்றவழக்கில் போடி போலீஸாா் கைது செய்து, வியாழக்கிழமை இரவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தேனி மாவட்டச் சிறையில் அடைப்பதற்காக தலைமை காவலா் சந்தோஷ் அழைத்துச்சென்றாா்.

அப்போது, கணேசன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறினாராம். இதையடுத்து, இவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு, பின்னா் மீண்டும் மாவட்டச் சிறைக்கு அழைத்துச் சென்ற போது, அவா் திடீரென தப்பியோடினாா். அவரை போலீஸாா் தொடா்ந்து துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் கண்டமனூா் போலீஸாா் தனிப்படை அமைத்து தப்பியோடிய கைதி கணேசனைத் தேடி வருகின்றனா்.