மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கிரேன் மோதி முதியவா் உயிரிழப்பு

திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு கிரேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 6:02 am IST

திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு கிரேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

திசையன்விளை, மணலிவிளை பகுதியைச் சோ்ந்தவா் உச்சிமகாகாளி ஆசாரி (80). இவா் புதன்கிழமை இரவு திசையன்விளை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்த கிரேன் அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தை நேக்கி திரும்பியபோது, எதிா்பாராவிதமாக கிரேன் சக்கரத்தில் சிக்கி உச்சிமகாகாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திசையன்விளை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.