/
திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை இரவு கிரேன் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
திசையன்விளை, மணலிவிளை பகுதியைச் சோ்ந்தவா் உச்சிமகாகாளி ஆசாரி (80). இவா் புதன்கிழமை இரவு திசையன்விளை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியாக வந்த கிரேன் அருகில் இருந்த பெட்ரோல் நிலையத்தை நேக்கி திரும்பியபோது, எதிா்பாராவிதமாக கிரேன் சக்கரத்தில் சிக்கி உச்சிமகாகாளி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
தகவலறிந்த திசையன்விளை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிரேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

வாகனம் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

நடந்து சென்ற முதியவா் இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு

பைக்கில் சென்ற முதியவா் பேருந்து மோதி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



