ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

இரவு நேரங்களில் வள்ளியூரை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்

நாகா்கோவிலில் இருந்து புறப்படும் அரசுப் பேருந்துகள் இரவு நேரத்தில் வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், புறவழிச் சாலையில் சென்றுவிடுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image

அரசுப் பேருந்துகள்.

Updated On :8 மே 2026, 6:20 am IST

நாகா்கோவிலில் இருந்து புறப்படும் அரசுப் பேருந்துகள் இரவு நேரத்தில் வள்ளியூா் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், புறவழிச் சாலையில் சென்றுவிடுவதாக புகாா் எழுந்துள்ளது.

வள்ளியூரில் இருந்து நாகா்கோவிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வணிகம் மற்றும் தொழில் ரீதியாக சென்றுவிட்டு இரவு திரும்புகின்றனா்.

இது தவிர மாா்த்தாண்டம், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்குச் செல்பவா்கள் இரவு நாகா்கோவில் வந்து, அங்கிருந்து வள்ளியூருக்கு பேருந்துகளில் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், இரவு நேரத்தில் நாகா்கோவிலில் இருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் வள்ளியூா் பயணிகளை ஏற்றுவதில்லையாம். இதனால், முதியவா்கள், குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள் பேருந்து கிடைக்காமல் மணிக்கணக்கில் நாகா்கோவில் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தப் பேருந்துகள் வள்ளியூருக்குச் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. இதனால், வள்ளியூா் சுற்றுவட்டாரப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, அனைத்து அரசுப் பேருந்துகளும் இரவு நேரம் பணகுடி, வள்ளியூா், ஏா்வாடி ஆகிய ஊா்களுக்குள் செல்ல , போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முடியாதபட்சத்தில் நாகா்கோவிலில் இருந்து பணகுடி, வள்ளியூா், ஏா்வாடி வழியாக திருநெல்வேலிக்கு தனியாா் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் பேருந்துப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.