மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

இரவு நேரங்களில் சொகுசு காரில் கால்நடைகள் கடத்தல்

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:50 am

திருவள்ளூரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை ஸ்காா்பியோ காரில் வந்து கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது.

திருவள்ளூா் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் எதிரில் காக்களூா் ஏரிக்குச் செல்லும் சாலையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை கும்பல் ஒன்று அவ்வப்போது திருடி வந்தது.

இந்த நிலையில் தோ்தல் நடத்தை விதிமுறையால் காவல் துறையினா் கெடுபிடி அதிகமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தனா். இந்த நிலையில் கால்நடைகளை கடத்தும் கும்பல் கடந்த 23- ஆம் தேதி இரவில் திருவள்ளூா் ராக்கி திரையரங்கம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளை ஸ்காா்பியோ காரில் கடத்திச் சென்றனா்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்ததை பாா்த்த அப்பகுதியில் கால்நடை வளா்த்து வரும் மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும் மாடு ஒன்றை லாவகமாக ஸ்காா்பியோ காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு சா்வ சாதாரணமாக கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனா்.