மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 9:59 pm

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ரயில் நிலையப் பிரிவில் சென்னை எழும்பூரில் 10, 11- ஆவது நடைமேடையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் சனிக்கிழமை (ஏப். 4) முதல் 7-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதையடுத்து, சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்களும், தாம்பரத்திலிருந்து இரவு 10.20, 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையம் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், ஏப். 4, 6, 7 ஆகிய தேதிகளில் கடற்கரையிலிருந்து காலை 5.50, இரவு 11.05 , 11.30, 11.59 ஆகிய மணிகளில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதியளவு ரத்து: ஏப். 5-ஆம் தேதி கடற்கரையிலிருந்து காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மேலும், திருமால்பூரிலிருந்து இரவு 8 மணிக்கும், செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20, 11 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.