சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் 8 புகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு ரயில் நிலையப் பிரிவில் சென்னை எழும்பூரில் 10, 11- ஆவது நடைமேடையில் பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் சனிக்கிழமை (ஏப். 4) முதல் 7-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
இதையடுத்து, சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்களும், தாம்பரத்திலிருந்து இரவு 10.20, 11, 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை நிலையம் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல், ஏப். 4, 6, 7 ஆகிய தேதிகளில் கடற்கரையிலிருந்து காலை 5.50, இரவு 11.05 , 11.30, 11.59 ஆகிய மணிகளில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
பகுதியளவு ரத்து: ஏப். 5-ஆம் தேதி கடற்கரையிலிருந்து காலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மேலும், திருமால்பூரிலிருந்து இரவு 8 மணிக்கும், செங்கல்பட்டிலிருந்து இரவு 10.20, 11 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!

மின்சார ரயில் சேவை குறைப்பு: மாற்றுப் போக்குவரத்தை விரும்பாத பயணிகள்!

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


