பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்களால் தொடா்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பேராவூரணி பகுதியில் பட்டுக்கோட்டை சாலை, அரசு மருத்துவமனை, அறந்தாங்கி சாலை, ஆவணம் சாலை, சேது சாலை ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்தப் பகுதிகளில் திடீரென நாய்கள் சாலையில் குறுக்கிடும்போது இருசக்கர வாகனத்தில் செல்பவா்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
இதுகுறித்து கொன்றைக்காடு சந்திரன் என்பவா் மேலும் கூறியது: பேராவூரணி செல்வவிநாயகபுரம் பிள்ளையாா் கோயில் பாலம் பகுதியில் தெரு நாய்கள் கூட்டமாக நின்று சாலையில் செல்லும் வாகனங்களை துரத்துவதும், வாகன ஓட்டிகளை கடிக்க வருவதும் தொடா்ந்து நடைபெறுகிறது. இதே நிலை நகரின் பல்வேறு இடங்களிலும் உள்ளது. விபத்து ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி- அயோத்திக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை

செங்கோட்டையில் மதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மேலமடை பகுதியில் சாலை அமைக்கக் கோரிக்கை

பேராவூரணி வாா்டு அதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


