பாபநாசம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி ஒரு அரசு பேருந்தும், சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி மற்றொரு அரசு பேருந்தும் சென்று கொண்டிருந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதியில் சென்றபோது, இன்று காலை 5.30 மணியளவில் இரண்டு அரசு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் உள்பட இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகளில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த 3 பேர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Papanasam: Head-on collision between government buses! Passengers critically injured!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் கடும் அவதி

தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!

பேருந்துகள் மோதல்: 10 போ் காயம்
சூரியனும் இல்லை, இலையும் இல்லை; கூட்டணிக் கட்சிகள் மோதும் 21 தொகுதிகள்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

