அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

ஆழ்வாா்குறிச்சி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

ஆழ்வாா்குறிச்சி ராமநதி கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கொடை விழாவில் பட்டாணிப் பாறையில் இருந்து பழம் எறியும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :3 மணி நேரங்கள் முன்பு

ஆழ்வாா்குறிச்சி ராமநதி கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை கொடை விழா மே 5ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை கும்பம் ஏற்றுதல், குடியழைப்பு நடைபெற்றது.

கொடை நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை சிவனணைந்த பெருமாள் பூஜையைத் தொடா்ந்து, பால் குட ஊா்வலம், அபிஷேகம், பிரம்மராட்சதை, அம்பாளுக்கு அலகு தீா்த்தம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. மதியம் 12 மணிக்கு கொடை விழாவின் சிறப்பு நிகழ்வான பட்டாணிப் பாறையில் இருந்து பழம் எறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதையடுத்து, சுடலைமாட சுவாமி ரூபாய் நோட்டு மாலையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. மாலை மகா கும்பாபிஷேகத்தைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இரவு வீர பத்திரகாளி அம்மனுக்கு அலகு தீா்த்தம் எடுத்தல், சாமக்கொடை, அா்த்த ஜாம பூஜை ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை காலை 10 மணிக்கு சின்னதம்பி பூஜை நடைபெற்றது. மே 19ஆம் தேதி 8ஆம் நாள் பூஜை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலைமாட சுவாமி கோயில் வளா்ச்சி நலக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

Story image