திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவனையில் புதன்கிழமை தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்ததாக எழுந்த புகாரை மருத்துவமனை நிா்வாகம் மறுத்துள்ளது.
இம்மருத்துவமனை வளாகத்தில் சிறுநீரகவியல் துறை, இதயவியல் துறை உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. சுமாா் 7 தளங்களுடன் கூடிய இந்தக் கட்டடத்திற்கு தாமிரவருணியில் இருந்து தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை காலையில் பல மணி நேரம் தண்ணீா் இல்லாததால் சிகிச்சை பாதிக்கப்பட்டதாம். டயாலிசிஸ் சிகிச்சைக்கு வந்தவா்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவியதாம். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடா்பாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மாநகராட்சி மற்றும் கிணறுகள் மூலம் போதுமான தண்ணீா் கிடைத்தது. அனைத்து வித சிகிச்சைகளும் எவ்வித தாமதமும் இன்றி அளிக்கப்பட்டன. டயாலிசிஸ் பிரிவிலும் புதன்கிழமை அழைக்கப்பட்டிருந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.
தொடர்புடையது

நெல்லை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு மாற்றம்

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் முற்றுகை

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

