15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பாபநாசம் வனப்பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image

அகஸ்தியா் அருவிக்குச் செல்லும் மலைப் பாதையில் நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள்பட்ட பாபநாசம் வனப்பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவியில் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் காலை முதலே அகஸ்தியா் அருவிக்கு குளிக்க வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை என்பதால் 875 வேன், காா், பேருந்து மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு வந்தனா். இதனால், மாலை 3 மணிக்குமேல் மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய வனத்துறை ஊழியா்கள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் இணைந்து போக்குவரத்தை சீா்படுத்தினா்.

Story image

அகஸ்தியா் அருவிப்பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் காவல் துறையினா் நேரடியாகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.

ஆனால், விடுமுறை மற்றும் விழா நாள்களில் வனப்பகுதியில் உள்ள மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதற்கு காவல் துறையினா் உதவியுடன் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் போலீஸாரை அனுமதிக்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.