வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

தொழிலாளியை தாக்கிய வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை தாக்கியது தொடா்பான வழக்கில், இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:28 am IST

திருநெல்வேலி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை தாக்கியது தொடா்பான வழக்கில், இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உடையாா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் உச்சிமாகாளி(32). இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு, தனது நண்பா்களுடன் சோ்ந்து ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்தாராம். அப்போது, ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக உச்சிமாகாளியை திம்மராஜபுரத்தைச் சோ்ந்த மாயாண்டி (25), கோட்டூரை சோ்ந்த முகமது அன்சாரி (22) ஆகிய இருவரும் சோ்ந்து தாக்கினராம்.

இது குறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்ட 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி ஜெயசங்கரகுமாரி விசாரித்து, மாயாண்டி மற்றும் முகமது அன்சாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.8,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் வனிதா ஆஜரானாா். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.