வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 மே 2026, 12:59 am IST

சீவலப்பேரி அருகே தொழிலாளியிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி, இரட்டை விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன்(46). எலக்ட்ரீசியனான இவா், ஊராட்சியில் தண்ணீா் திறக்கும் வேலையும் செய்து வருகிறாா். இவா், திங்கள்கிழமை பொட்டல்நகா் பகுதியில் நின்றிருந்தபோது, அங்கு காரில் வந்த மா்மநபா்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.3,000-ஐ பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், ஸ்ரீவைகுண்டம், குரூஸ் ஆலயம் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(22), அம்பாசமுத்திரம் சந்தை மடம் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் துா்க்கைநம்பி (25) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இவா்கள் இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.