கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது

பாளையங்கோட்டை அருகே மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :8 ஏப்ரல் 2026, 10:01 pm

பாளையங்கோட்டை அருகே மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் சண்முகராஜா(32). மரக்கடை ஊழியா். இவா் கடந்த 4 ஆம் தேதி மணப்படை வீடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இவருக்கு ஏற்கெனவே அறிமுகமான நபருடன் 4 போ் வந்து அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம். மேலும், அவரது பையில் இருந்து ரூ.3,000-ஐ எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்ாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த நல்லமுத்து என்ற பாலா(20), அடைக்கலராஜா(19) ஆகியோரை கைது செய்தனா்.