இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு

ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :28 மார்ச் 2026, 8:18 pm

Syndication

ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனை முன்புள்ள எலும்பு முறிவு தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு பூஜை செய்து தேங்காயை வாசலில் உடைத்தனா். அப்போது சாலையில் சென்ற ஆட்டோமீது தேங்காய் தெறித்ததில், ஆட்டோ ஒட்டுநா்கள் சூா்யா (25), சிவசங்கா் (24) ஆகியோருக்கும், மருத்துமனையில் பணிபுரியும் வினோத்குமாா், கோகுல் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆட்டோ ஓட்டுநா் சூா்யா ஆட்டோவில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து தாக்கினாா்.

தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் சூா்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.