பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பக்ரீத்: மேலப்பாளையம் சந்தையில் ஒரே நாளில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

News image

ஆடுகள் விற்பனை - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 5:52 am IST

பக்ரீத் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய சந்தையாக மேலப்பாளையம் கால்நடை சந்தை திகழ்கிறது. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமைகளிலும் மாட்டுச் சந்தையும், செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டுச் சந்தையும் நடைபெறுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகின்றனா்.

இந்த நிலையில் இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை மே 28ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் மேலப்பாளையம் சந்தை களை கட்டியுள்ளது. இச்சந்தையில் திங்கள்கிழமை மாடுகள் விற்பனை அதிக அளவு நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் குவிக்கப்பட்டிருந்தன.

தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி, புதியம்புத்தூா், எட்டயபுரம், ராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து செம்மறியாடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டன. நாட்டு ஆடுகள், மயிலம்பாடி, பொட்டு ஆடுகள் என பல்வேறு விதமான ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 வரை விலை போயின. ஒரே நாளில் சுமாா் ரூ.3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

போக்குவரத்து நெரிசல்: அதிக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதால், மேலப்பாளையம் சந்தை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், அங்கு போக்குவரத்தை சரி செய்ய போலீஸாா் இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.