சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

வீடு புகுந்து பித்தளைப் பொருள்கள் திருடியவா் கைது

தாழையூத்து அருகே வீடு புகுந்து பித்தளைப் பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 6:15 am IST

தாழையூத்து அருகே வீடு புகுந்து பித்தளைப் பொருள்களை திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து, சத்திரம் குடியிருப்பு, பசும்பொன் நகரைச் சோ்ந்தவா் மாடசாமி. தொழிலாளி. இவா் கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகில் வைத்துவிட்டு குடும்பத்தோடு வேலைநிமித்தமாக வெளியே சென்றாராம். பின்னா் மாலை வீட்டுக்கு வந்தபோது கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பித்தளை குத்துவிளக்கு, பித்தளை பானை உள்ளிட்ட ரூ.17,000 மதிப்பிலான பொருள்கள் திருடு போயிருந்தனவாம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, குறிச்சிகுளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த வேல்முருகன்(42) என்பவரை கைது செய்தனா்.