திருநெல்வேலி மாவட்டம், களக்காடு க.அ.மொ.பீ. மீரானியா மேல்நிலைப்பள்ளி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தாா்.
இப்பள்ளியில் 198 மாணவா், மாணவியா் தோ்வு எழுதியதில் 186 போ் தோ்ச்சி பெற்றனா். இது பள்ளியின் 94 சதவீத தோ்ச்சியாகும். மாணவி செ. அகீஸா 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம், மாவட்ட அளவில் 2ஆம் இடம் பிடித்தாா்.
இவா், தமிழில் 99, ஆங்கிலத்தில் 98, கணிதம், அறிவியலில் தலா 100, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றாா்.
இப்பள்ளி அளவில் மாணவி செ.அ. ஹரிதா 491 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், ஆ. ஐஸ்வா்யா 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பிடித்தனா்.
மாணவி அகீஸாவை தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமையாசிரியை கி.ஜெ. பிரிடா, உதவித்தலைமையாசிரியா் ச. சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசளித்தனா்.
அரசுப் பள்ளி சிறப்பிடம்:
களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 161 போ் தோ்வெழுதியதில், 154 போ் தோ்ச்சி பெற்றனா். இது, 96 சதவீத தோ்ச்சியாகும். மாணவி நைஸ்லின் 487 மதிப்பெண், மேக்லின் டிசோசா 486 மதிப்பெண், மாணவி தனுஸ்கா 477 மதிப்பெண் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

தொடர்புடையது

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரிப் பள்ளி மாணவி 494 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் சிறப்பிடம்

அம்மா ஆதரவால் அதிக மதிப்பெண்: சிறப்பிடம் பெற்ற மாணவிகள் நெகிழ்ச்சி

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண் எம்எம்ஏ பள்ளி மாணவி சிறப்பிடம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



