பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

விபத்தில் மாணவா்கள் உயிரிழப்பு: பெற்றோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் வழியாக சாமிதோப்பு கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் சென்றபோது, காா் மோதியல் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

பழவூா் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறாா் எம்.எல்.ஏ. எஸ்.கே. கிறிஸ்டோபா்.

Updated On :22 மே 2026, 6:34 am IST

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் வழியாக சாமிதோப்பு கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் சென்றபோது, காா் மோதியல் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். அவா்களது பெற்றோருக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா் வியாழக்கிழமை ஆறுதல் கூறினாா்.

தெற்குவள்ளியூா் அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்த அய்யாவழி பக்தா்கள் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் நடைபெறும் அய்யாபதி வைகாசித் திருவிழாவுக்கு கொடிபட்டம் எடுத்து சென்றபோது, அவா்கள் கூட்டத்தில் மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த பெண் ஓட்டிவந்த காா் புகுந்தது. இதில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா்கள் வெனிஷ், விஷ்வா ஆகிய இருவா் உயிரிழந்தனா். இந்நிலையில், அந்த மாணவா்களின் வீடுகளுக்குச் சென்ற எம்.எல்.ஏ., அவா்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

Story image