தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஹரி கிருஷ்ணன் (20). இவா் தூத்துக்குடி, பூபால்ராயா்புரம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்து, சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்ததும், நண்பா் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து கொண்டு, டீ குடிப்பதற்காக வெளியில் சென்றாராம்.
தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை பிரதான சாலையில் உள்ள வேகத் தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியபோது, பின்னால் அமா்ந்திருந்த ஹரி கிருஷ்ணன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்து மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



